என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலையூத்து அருவி தொழிலாளி பலி"
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. சுமை தூக்கும் தொழிலாளி. அவரது மகன் வசந்தகுமார் (வயது18). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு மைக்செட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை விருப்பாட்சி தலையூத்து அருவியில் வசந்தகுமார், இதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் செல்வராஜ் (19), மாரிஸ்வரன் (19) ஆகியோர் விருப்பாட்சி கீழ் தலையூத்து அருவியில் குளிக்க சென்றனர். எதிர்பாராத விதமாக வசந்தகுமார் அருவியில் மூழ்கிவிட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புபடை நிலை அலுவலர் (பொ) சிவன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்